×

ஏற்காடு பேருந்து விபத்து: எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கை: ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து சுமார் 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. சம்பவ இடத்தில் நான்கு பேர் இறந்ததாகவும், மருத்துவமனையில் மேலும் இருவர் இறந்ததாகவும், இருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் பலியான 6 பேர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கிடவும்; பலத்த காயமடைந்தோருக்கு ரூ. 2 லட்சமும், சிறு காயமடைந்தோருக்கு ரூ. 50 ஆயிரமும், அரசின் சார்பில் நிதியுதவி வழங்கிடவும், உயர் மருத்துவ சிகிச்சை அளித்திடவும் அரசை வலியுறுத்துகிறேன். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

The post ஏற்காடு பேருந்து விபத்து: எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Yercaud bus accident ,Edappadi Palanichamy ,CHENNAI ,AIADMK ,General Secretary ,Edappadi Palanichami ,Yercaud ,Salem ,Yercaud bus ,
× RELATED ஏற்காடு விபத்து : அரசு நிவாரணம் வழங்க இபிஎஸ் கோரிக்கை